முக்தி அடைய தற்கொலை? அதிர்ந்துபோன திருவண்ணாமலை! நடந்தது என்ன?

 திருவண்ணாமலையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய துயர சம்பவம்.



உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலை தேடி நாடு எங்கும் உள்ள சிவ பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவது நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது, தமிழ்நாடு மட்டுமில்லாமல் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் வந்து செல்கின்றனர்

இங்கு கிரிவலம் செல்வதும்  அண்ணாமலையாரை தரிசனம் செய்துவிட்டுச் செல்கின்றனர். அப்படி வருபவர்கள் இங்கு அறை எடுத்து தங்குகின்றனர்.

இந்த நிலையில்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதி பெரியகோட்டை பீர்கனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த மகாகாலா வியாசர், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த மகாலஷ்மி, அவரது மகள் 18 வயதான ஜலந்தரி, 14 வயதான முகுந்த் ஆகாஷ் குமார் ஆகியோர், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள டிவைன் ஃபார்ம் ஹவுஸ் ஸ்டே என்கிற உரிமம் இல்லாத தனியார் விடுதியில் தங்கி உள்ளனர்.

இந்த நிலையில், அவர்கள் தங்கியிருந்த அறையில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாகத் திருவண்ணாமலை மேற்கு காவல்நிலையத்துக்கு தகவல் தந்துள்ளனர். அதன்படி காவல்துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்த்தபோது, நால்வரும் தற்கொலை செய்துகொண்டு இருப்பது தெரியவந்துள்ளது. தற்கொலை செய்துகொண்டவர்கள் முக்தி அடைய இந்த முடிவை எடுத்ததாக ஒரு டைரியில் எழுதி வைத்துள்ளனர் என காவல்துறையினர் கூறுகின்றனர். அவர்களது உடல்களை கைப்பற்றிய போலீசார் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

 இந்த நால்வரின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? அவர்கள் ஏன் இந்த முடிவை எடுத்தார்கள்? அவர்களை யாராவது தூண்டி விட்டார்களா என்கிற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆன்மீக நகரமாக விளங்கும் திருவண்ணாமலை நகரில் அதிர்ச்சியை கொடுத்திருக்கும் இந்த சம்பவத்தால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்