செங்கம் நகரில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சம்பவம் தற்பொழுது நாடெங்கும் பெரும் அதிர்வடைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அதிமுகவின் சார்பில் தமிழகமெங்கும் மாபெரும் அளவில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய சமூக வலைதள பதிவில் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுகவின் போராட்டம் ஓயாது என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள எம்ஜிஆர் சிலையின் முன்பு அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும், அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர் மகரிஷி மனோகரன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தாள் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
0 கருத்துகள்