திருவண்ணாமலையில் இடி மின்னல் தாக்கி சேதம் அடைந்திருந்த புகழ்பெற்ற பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரில் அமைந்திருக்கும் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ருக்மணி சத்திய பாமா சமேத ருக்மணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 9-5-2025 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. அயோத்தில இருந்து ராமபிரான் வனவாசம் சென்ற பொழுது இந்த கோவிலில் வந்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டதாக சொல்லப்படுகிறது.
செங்கம் நகரை தலைமை இடமாகக் கொண்டு ஆட்சி புரிந்த தளவ நாயக்கர் மன்னரால் இந்த ஆலயம் நிறுவப்பட்டுள்ளது. மிகவும் தொன்மை வாய்ந்த இந்த கோவிலின் மீது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடி தாக்கி ராஜ கோபுரத்தின் ஒரு பகுதி சேதம் அடைந்தது. அதன் பிறகு தற்போதைய திமுக ஆட்சியில் செங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு பெ கிரி அவர்கள் இந்த கோவிலின் நிலையை சட்டசபையில் எடுத்துக்கூறி கோவிலை பு ணரமிக்க நிதி வேண்டுமென தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் வைத்தார். அதனை ஏற்றுக் கொண்ட தமிழக முதல்வர் பெருமாள் கோவிலை சீரமைப்பு செய்ய சிறப்பு நிதி ஒதுக்கி கொடுத்தார்.
அதன் பிறகு கோவிலை புணரமைக்கும் பணி நடைபெற்று முடிந்து கோவில் உட்பிரகாரத்தில் கருங்கல் தரை போடப்பட்டு கோவிலின் அனைத்து பகுதிகளுக்கும் வர்ணம் பூசி கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை சார்பாக சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.
புகழ் பெற்ற செங்கம் பெருமாள் கோவிலின் கும்பாபிஷேகத்தை காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு கோபுரத்தின் மீது இருந்து தெளிக்கப்பட்ட புனித நீரில் நனைந்து பெருமாளின் அருளாசியை பெற்று சென்றனர்.
மேலும் இந்த கும்பாபிஷேக விழாவில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு பெ கிரி அவர்களும் கலந்து கொண்டார்.
0 கருத்துகள்