பெஞ்சல் புயலால் அதிக நீர் திறந்து விடப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் சாத்தூர் அணை அதிகப்படியான நீர் வெளியேற்றப்படுகிறது.
மீண்டும் சாத்தனூர் அணையில் நீர்திறப்பு 13,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு 10,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 119 அடி கொண்ட சாத்தனூர் அணையின் நீர்மட்டம் தற்போது 117.45 அடியை எட்டி உள்ளது.
சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 2,500 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் பாதுகாப்பு கருதி தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 10,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 10,000 கனஅடி நீர் திறப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டிச.1ம் தேதி 5-வது கட்ட எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில் தற்போது 6-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களை சேர்ந்த கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்