செங்கம் அருகே இருக்கும் சாத்தனூர் அணையில் சந்தன மரத்தை வெட்டி கடத்திய மர்ம கும்பல்!
திருவண்ணாமலை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமாக விளங்குவது தான் செங்கம் அருகே இருக்கும் சாத்தனூர் அணையாகும். 119 அடி உயரம் கொண்ட இந்த அணையின் தற்போது 82 அடி நீர்மட்டம் உள்ளது இந்த அணை பகுதியில் பொதுப்பணித்துறை அலுவலகம், காவல்துறை, நீர் மின்சாரம் தயாரிக்க கூடிய இடம், வனத்துறை, தபால் நிலையம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளது.
ஆசிய கண்டத்திலேயே இரண்டாவது மிகப்பெரிய முதலை பண்ணை அமைந்திருப்பதும் இந்த சாத்தனூர் அணையில் தான். இங்கு 378 நன்னீர் முதல் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன இதனை பாதுகாப்பதற்காக வனசர அலுவலர் ராஜராஜன், வனக்காப்பாளர்கள் சேகரன், இந்திரகுமார், தற்காலிக ஊழியர்கள் மூன்று பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
முதலைப் பண்ணை வளாகத்தில் பல்வேறு வகையான விலை மதிப்பு மிக்க மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது மேலும் அந்த பகுதியில் பழமை வாய்ந்த சந்தன மரம் ஒன்று இருந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே தான் இங்கு நேற்று முன்தினம் காவலராக சேகரன் இருந்துள்ளார். இரவு 10 மணி அளவில் முகமூடி அடைந்தபடி வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் முதலை பண்ணை உள்ளே சென்று காவலர் சேகரரை தாக்கி கை கால்களை கட்டி போட்டுவிட்டு மரம் அறுக்கும் இயந்திரம் மூலம் சந்தன மரத்தை அடியோடு அறுத்து தொண்டு துண்டாக்கி அவர்கள் எடுத்து வந்த மினி வேனில் ஏற்றி கடத்தி சென்றுள்ளனர்.
அந்த நேரத்தில் அணைப்பகுதியில் கன மழை பெய்ததால் தற்காலிக ஊழியர் இரவு 11 மணிக்கு வந்தாராம் அப்பொழுது சேகரனை கட்டிப்போட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கட்டுகளை கழட்டி விட்டு விசாரித்த பொழுது மர்ம நபர்கள் சந்தன மரத்தை வெட்டி எடுத்து சென்றுள்ளது தெரிய வந்தது உடனடியாக வனச்சரக அலுவலர் ராஜராஜன் மாவட்ட வன அலுவலர் யோகேஷ் கார்க் ஆகய இருவருக்கும் தொலைபேசி மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து நேற்று மாவட்ட வன அலுவலர் சாத்தனூர் அணையில் உள்ள முதலைப்பனை பகுதியில் சந்தன மரத்தை அறுத்து எடுத்துச் சென்ற இடத்தை பார்வையிட்டனர், பின்னர் முதலை பண்ணையில் பணிபுரியும் ஊழியர்களிடம் தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தினார்கள். மேலும் சாத்தனூர் அணையின் நுழைவு வாயில் மற்றும் அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
காவலாளியை கட்டி போட்டுவிட்டு முகமூடி ஆசாமிகள் சந்தன மரத்தை வெட்டிய கடத்திய சம்பவம் சாத்தனூர் அணை பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வனத்துறை அதிகாரியுடன் சேர்த்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
0 கருத்துகள்