முதலமைச்சர் மு க ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் தற்பொழுது அனைவருக்கும் இலவச வீடு வழங்கும் கலைஞர் கனவு இல்லத் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 1975 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் ஆட்சி காலத்தில் வீடு இல்லா ஏழை எளிய மக்களுக்கு அரசால் இலவச வீடு கட்டித் தரும் திட்டம் துவங்கப்பட்டது. அதன் பிறகு 2010ல் குடிசை இல்லா தமிழகம் என்ற பெயரில் விரிவுபடுத்தப்பட்டது. தற்பொழுது திமுகவின் முதல்வர் மு க ஸ்டாலின் ஆட்சி காலத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்டம் என்கிற பெயரில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி கலைஞரின் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் குடிசைகள் இருக்கக் கூடாது என்பதற்காக இந்த திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் அனைவருக்கும் பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகள் அமைத்து தர அரசு முடிவு செய்திருக்கிறது.
இத்திட்டத்தை செயல்படுத்த 2024 மற்றும் 25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ஒரு வீட்டுக்கு மூன்று 3.10 இலட்ச ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு லட்சம் வீடுகள் கட்டி தர முடிவு செய்யப்பட்டு அதற்காக 3.100 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.
இந்தத் திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளை வரும் 25ஆம் தேதிக்குள் கணக்கெடுப்பு செய்து இறுதி பட்டியல் தயார் செய்து அனுப்பவும் அரசு உத்தரவிட்டிருக்கிறது. மேலும் வரும் 30 ஆம் தேதிக்குள் கிராம சபையை கூட்டி ஒப்புதல் பெற்று பட்டியலை அனுப்பி வைக்குமாறும், வருகிற ஜூலை 10ஆம் தேதிக்குள் வீடு கட்டுவதற்கான பணிகளை துவங்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதன் மூலம் ஏழை எளிய மக்கள் பயன்பெறுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
0 கருத்துகள்