செங்கத்தில் பெட்ரோல் பங்கில் நள்ளிரவில் புகுந்து காதல் புது மாப்பிள்ளையை சரமாரியாக வெட்டிய தந்தை மகன் உட்பட 5 பேர் கைது.
இதற்கிடையே செங்கம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் தனியார் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்த திருப்பத்தூரை சேர்ந்த சந்தனம் மகன் விஜி என்பவர் வேலை செய்து வந்திருக்கிறார். இவர் சென்னசமுத்திரம் காளி கோவிலை பற்றி கேள்விப்பட்டு அக்கோவிலுக்கு அடிக்கடி சென்று வந்திருக்கிறார். அப்பொழுதுதான் விஜய் என்பவருக்கும் காளி கோவில் பூசாரியான ஜானகிராமன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு விஜியை பெட்ரோல் பங்கில் வேலை முடிந்தவுடன் கோயிலுக்கு வந்து அங்கேயே தங்கி சேவை செய்யுமாறு சொல்லி இருக்கிறார். அதன் பிறகு அவரும் பெட்ரோல் பங்க் வேலை முடிந்ததும் சென்னசமுத்திரம் காளி கோவிலுக்கு சென்று அங்கேயே தங்கி வந்திருக்கிறார்.
இதற்கிடையே காளி கோவில் பூசாரி ஜானகிராமனின் மகள் ஜெயஸ்ரீ (வயது 19) என்பவரும் பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து கோவிலில் தங்கி சேவை செய்து வந்த விஜி என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
இவர்களின் காதலுக்கு ஜெயஸ்ரீயின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இருவரும் சில மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து தனியாக வசித்து வந்தனர்.
தன்னுடைய மகள் தன்னிடம் வேலை செய்த ஒருவரே காதலித்து திருமணம் செய்து கொண்ட தாள் ஆத்திரமடைந்த காளி கோவில் பூசாரி ஜானகிராமன் கூலிப்படையினரை வைத்து விஜி பணிபுரிந்து வந்த தனியார் பெட்ரோல் பங்கில் நள்ளிரவில் கத்தியால் சரமாரியாக தாக்கி உள்ளார்கள் சத்தம் கேட்டு அவரை காப்பாற்ற சென்ற மற்றொரு ஊழியரான அரவிந்த்சாமி என்பவரையும் கத்தியால் வெட்டி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த விஜி மற்றும் அரவிந்த்சாமி ஆகியோரை செங்கம் மருத்துவமனையில் அனுமதித்து பிறகு மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற செங்கம் காவல்துறையினர் பெட்ரோல் பங்கில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கூலிப்படையை ஏவிய பூசாரி ஜானகிராமன் மற்றும் அவருடைய மகன் ராஜேஷ் மற்றும் கூலிப்படையினரான சிவா,திருமலை, மதி ஆகியோரை திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு கார்த்திகேயன் உத்தரவின் பேரில், மாவட்டத் துணை காவல் கண்காணிப்பாளர் தேன்மொழி அவர்களின் தலைமையில் செங்கம் காவல்துறையினர் விரைந்து 12 மணி நேரத்திற்குள்ளாகவே குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
மருமகனை மாமனாரே கூலிப் படையினரை வைத்து கொலை செய்ய முயற்சித்தது செங்கம் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0 கருத்துகள்