மத்திய அமைச்சராகும் அண்ணாமலை.. அழைப்பு விடுத்த பிரதமர் மோடி!

 தமிழகத்தில் பாஜக தோல்வியை சந்தித்திருந்தாலும் மக்களின் நலனுக்காக மந்திரி பதவி கொடுத்து அழகு பார்க்க போகும் பிரதமர் மோடி!


இரண்டு மாத காலமாக இந்தியாவையே பரபரப்பாக வைத்துக் கொண்டிருந்த மக்களவைத் தேர்தல் திருவிழா முடிந்து தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற பிரதமர் மோடியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. 

நாடெங்கிலும் கூட்டணி வைத்து தேர்தலில் களம் கண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி தற்போது 296 இடங்கள் வரை கைப்பற்றி உள்ளது குறிப்பாக பாரதிய ஜனதா கட்சி 240 இடங்கள் வரை கைப்பற்றி ஆட்சி உள்ளது. ஆனால் இது ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் இல்லை என்றாலும் கூட்டணி கட்சிகள் பலம் தற்போது பாஜகவுக்கு இருப்பதால் பிரதமர் மோடி அவர்கள் வரும் ஒன்பதாம் தேதி இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவி ஏற்க உள்ளார். 

வரும் 9 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியுடன் சேர்த்து பல துறைகளுக்கான அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர். இதற்கிடையே தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் படு தோல்வியை சந்தித்தது. இதனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது பாஜக மேல் இடம் கடும் கோபத்தில் இருப்பதாக சொல்லப்பட்டது. ஏனென்றால் அதிமுக, பாஜக கூட்டணி முறிவுக்கு அண்ணாமலை தான் காரணம் என்ற பேச்சும் அடிபட்டுக் கொண்டிருக்கிறது, ஆகையால் தான் இந்த தோல்வி பாஜகவிற்கு வந்ததாகவும் சொல்லப்படுகிறது. 

அப்படி இருந்த போதிலும் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறாவிட்டாலும் 11 சதவீத வாக்கு வங்கியை பெற்றுள்ளது இதை பிரதமரும் மோடியும் குறிப்பிட்டு வரும் காலத்தில் தமிழகத்தில் பாஜக நிச்சயம் மாபெரும் சக்தியாக மாறும் என்று சொல்லியிருக்கிறார். 

அப்படி இருக்க, தற்போது பிரதமர் மோடியின் கீழ் அமையவருக்கும் புதிய ஆட்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மத்திய மந்திரி பதவி கொடுக்க இருப்பதாகவும், அதற்காக கலந்து ஆலோசிக்க அண்ணாமலையை டெல்லிக்கு வரச் சொல்லி பாஜக தலைவர் ஜே பி நட்டா மற்றும் அமித் ஷா ஆகிய இருவரும் அழைப்பு விடுத்து இருப்பதாகவும் செய்தி கிடைத்திருக்கிறது. 

அழைப்பு வந்தவுடன் அண்ணாமலை அவர்கள் டெல்லி புறப்பட்டு சென்று இருக்கிறார் கூடிய விரைவில் இதற்கான அறிவிப்பு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இருந்து எந்த ஒரு பாஜக உறுப்பினரையும் தமிழக மக்கள் தேர்ந்தெடுக்காவிட்டாலும் நிச்சயம் இரண்டு அல்லது மூன்று அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை பாரதிய ஜனதா கட்சியினர் இடையே உள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்