மேலும் ஐந்து நாட்களுக்கு மழை பொழிய வாய்ப்பு!
தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக கோடை வெயில் உச்சம் தொட்டு வெப்பநிலை அதிகரித்து காணப்பட்ட நிலையில் தற்பொழுது தமிழகமெங்கும் பரவலாக கோடை மழை பொழிந்து வருகிறது. அதனால் சற்று குளிர்ச்சியான சுழல் நிலவுவதால் மக்கள் ஆறுதல் அடைந்தனர்.
இதற்கிடையே வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்பொழுது புயலாக மாறி வருகிறது. மேலும் நாளை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரப் புயலாக மாறி வங்கதேசத்தை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இந்த அதிதீவிர புயலானது வங்கதேசத்திற்கு அருகே இருக்கும் சாகர் தீவு அருகே வரும் 26 ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பொழியும் எனவும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வட தமிழகம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் அரபிக் கடல் பகுதியில் தற்பொழுது புயல் சின்னம் ஒன்று உருவாகி இருக்கிறது அதனால் தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருப்பூர், நெல்லை, நீலகிரி, மதுரை, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட 10 மாவட்டங்களிலும் கன மழைக்கான வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை உறுதி செய்யப்பட்டுள்ளது.
0 கருத்துகள்