திருவண்ணாமலையில் வெற்றியை நெருங்குகிறதா பாஜக? வெளியான கள நிலவரம்!

 தமிழகத்தின் ஆன்மீக நகரமான திருவண்ணாமலையை குறிவைத்து பிரச்சாரத்தில் களமிறங்கிய பாஜக வேட்பாளர்! 


மக்களவைத் தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் தமிழகம் எங்கும் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக திமுக கூட்டணி, பாரதிய ஜனதா கூட்டணி, அதிமுக கூட்டணி ஆகிய வேட்பாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு வெற்றியைப் பெற தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

இதற்கு இடையே தமிழகத்தை பொறுத்தவரையில் திமுக கூட்டணிக்கும் பாரதிய ஜனதா கூட்டணிக்கும்தான் நேரடி போட்டி நிலவுவதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் 19 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்தத் தொகுதிகளில் பிரதமர் மோடி பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே பி நட்டா உட்பட பல முக்கிய தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். 

இதற்கிடையே தான் திமுகவின் கோட்டை என கருதப்படும் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக அஸ்வத்தாமன் போட்டிருக்கிறார். இவர் அதே ஊரை சேர்ந்தவர் என்றாலும் மக்களுக்கு அறிமுகம் இல்லாதவர் என முன்பு சொல்லப்பட்டது. ஆனால் தற்போது கள நிலவரம் மாறி இருப்பதாக செய்திகள் கிடைத்திருக்கிறது. 

தற்போது திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி மக்களவை உறுப்பினராக இருக்கும் சி என் அண்ணாதுரை ஆதரித்து திமுக சார்பில் முதல்வர் மு க ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் ஏ வா வேலு, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு பெ கிரி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

இருந்த போதிலும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனின் பிரச்சாரம் திமுகவுக்கு கடும் போட்டியாக நிலவுவதாக தெரிகிறது. குறிப்பாக பாரதிய ஜனதா தேசிய தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் தான் இன்று இந்திய உள்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அவர்கள் அஸ்வத்தாமனை ஆதரித்து திருவண்ணாமலையில் வாகன பேரணி நடத்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 


இந்த முறையும் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியை திமுக கை போற்றும் என திராவிட முன்னேற்றக் கழகம் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது பாரதிய ஜனதா கட்சியின் பார்வை திருவண்ணாமலையை நோக்கி திரும்பி இருப்பதால் அவர்களுக்கு சற்று கலக்கத்தை கொடுத்திருக்கலாம் என தெரிகிறது. 

தற்பொழுது திமுக வேட்பாளர் சி என் அண்ணாதுரைக்கும் பாஜக வேட்பாளர் திரு அஸ்வத்தம்மன் அவர்களுக்கும் நேரடி போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு வேட்பாளரும் தங்களது பலத்தை நிரூபிக்க முக்கிய தலைவர்களை அழைத்து வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் மனநிலையிலும் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் புதியவருக்கு வாய்ப்பு வழங்க முடிவெடுத்து இருப்பதாகவும் பல ஊடகங்கள் செய்தியையும் வெளியிட்டு இருக்கிறது.

ஆனாலும் திருவண்ணாமலையில் திமுகவை அவ்வளவு எளிதாக வீழ்த்த முடியாது என்பதை பாரதிய ஜனதா கட்சியும் அறிந்திருக்கும். அதேபோல் அஇஅதிமுக சார்பில் கலியபெருமாள் அவர்களை வேட்பாளராக நிறுத்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள் குறிப்பாக ஆஇஅதிமுகவின் பொதுச் செயலாளர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்களும் சில தினங்களுக்கு முன்பு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

ஆனால் தற்போதைய நிலவரப்படி திருவண்ணாமலை யில் தாமரையா? சூரியனா? என்பதுதான் பேசுபொருளாக மாறி உள்ளது. திருவண்ணாமலையை போல் பாஜக போட்டியிடும் 19 தொகுதிகளிலும் திமுக உட்பட அனைத்துக் கட்சிகளுக்கும் கடும் சவாலாக பாரதிய ஜனதா வேட்பாளர்கள் இருப்பார்கள் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. இதில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறாவிட்டாலும் தன்னுடைய வாக்கு வங்கியை அதிகரித்து காட்டும் எனவும் சொல்லப்படுகிறது. 

பொறுத்திருந்து பார்ப்போம் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியை கைப்பற்ற போவது யார் என்று!

கருத்துரையிடுக

0 கருத்துகள்