தமிழகம் மாற்றும் புதுவைக்கு மழை எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்!
தமிழகம் எங்கும் கோடை வெயில் நூறு டிகிரியை தாண்டி சுட்டெரித்துக் கொண்டிருக்கும் நிலையில் வானிலை ஆய்வு மையம் மழை அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
வளிமண்டல கீழ் அடுக்கு காற்று திசை மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி, தென் தமிழகம் மற்றும் அடுத்த உலகத்தின் பன்னிரண்டாம் தேதி முதல் 17ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், குறிப்பாக வட தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பொழியும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
வெப்பநிலையை பொறுத்த வரையில் எந்த மாற்றமும் இருக்காது எனவும் அவ்வப்போது காற்றும் வீசக்கூடும் எனவும் தெரிவித்திருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாக வாட்டி வதைத்து கொண்டிருக்கும் வெயிலின் தாக்கத்தை தணிக்க மழை அறிவிப்பு வந்திருப்பதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
0 கருத்துகள்