எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்புகளை தவிடு பொடியாக்கி வெற்றியை நோக்கி பயணிக்கும் பாரதிய ஜனதா கட்சி!
மூன்றாவது முறையாக பிரதமர் பதவிக்காக களத்தில் குதித்திருக்கும் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியைப் பிடித்து இந்திய திருநாட்டை உலக அரங்கில் மதிப்பு மிக்க நாடாக மாற்றியதில் திரு நரேந்திர மோடியின் பங்கு அதிகம் உண்டு என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. அப்படி இருக்க தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பாரதிய ஜனதா கூட்டணியின் சார்பாக திரு நரேந்திர மோடி அவர்கள் பிரதமர் வேட்பாளராக களமிறங்குகிறார்.
அவரை எதிர்க்க எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணி என்ற பெயரில் ஒன்று சேர்ந்து உள்ளது, குறிப்பாக இரண்டு முறை படுதோல்வியை சந்தித்த காங்கிரஸ் கட்சி தற்போது வெற்றி பெற்று ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி என்பது போல் மற்ற மாநிலங்களில் மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.
நரேந்திர மோடி அவர்களின் முதல் பிரதமர் தேர்தலை போலவே தற்பொழுது அவருக்கு வெற்றி வாய்ப்பு சாதகமாக இருப்பதாக தெரிகிறது. அதற்கேற்றார் போல் தான் தற்போது பிரபல ஆங்கில நாளிதழாக இருக்கும் தி ஹிந்து நடத்தி இருக்கும் கருத்துக்கணிப்பிலும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தான் வெற்றி வாய்ப்பு இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி மீண்டும் பிரதமர் வேட்பாளர் களத்தில் குதித்திருக்கும் நரேந்திர மோடிக்கு உங்கள் ஆதரவு உண்டா என்ற கேள்விக்கு 48 சதவீதத்திற்கும் மேலானவர்கள் பிரதமரின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கிறது அதனால் எங்களின் ஆதரவு உண்டு என தெரிவித்திருக்கிறார்கள். மேலும் ராமர் கோவில் கட்டியதன் மூலமாக பல கோடி மக்கள் பாஜகவை விரும்புவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அதே வேலையில் எதிர்க்கட்சியின் சார்பாக பிரதமர் வேட்பாளராக கருதப்படும் திரு ராகுல் காந்திக்கு 27 சதவீதம் பேர்தான் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். இதனை எல்லாம் வைத்து பார்க்கும் போது நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி 375 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்றும் இந்த கருத்துக்கணிப்பின் மூலம் தெரிய வருகிறது.
0 கருத்துகள்