செங்கம் அருகே இருக்கும் மண்மலை முருகர் கோவிலில் பால்குட ஊர்வலம் வெகு சிறப்பாக நடைபெற்றது!

 தமிழ் புத்தாண்டு பிறந்ததையொட்டி மண்மலை பாலசுப்பிரமணியம் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.


தமிழர்கள் கொண்டாடும் நல்ல நாட்களில் ஒன்றுதான் சித்திரை 1, இதை தமிழ் வருட பிறப்பாக கொண்டாடுவது வழக்கம், இந்நாளை முன்னிட்டு தமிழகம் எங்கும் உள்ள கோவில்களில் திரளான பக்தர்கள் சென்று வழிபட்டு வருகின்றனர் அவர்களுக்காக சிறப்பு பூஜைகள் சுவாமிக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தது. 

அதே போல் தான் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே இருக்கும் மண்மலை குன்று மேடு ஸ்ரீ பாலசுப்பிரமணிய ஆலயத்தில் இன்று காலை முதலே பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது. 

அதேபோல் மண்மலை ஊர் பொதுமக்கள் சார்பாக வருடம் தோறும் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பாலபிஷேகம் செய்வது வழக்கம், அந்த வகையில் மூன்றாவது ஆண்டாக இன்று காலை 11 மணி அளவில் பக்தர்களின் பால்குட ஊர்வலம் பம்பை, உடுக்கை, சிலம்பாட்டத்துடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பாலசுப்ரமணிய ஆலயத்தை கிரிவலமாக வந்து சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்பொழுது நாடு செழிக்க, மழை பொழியவும், நோய் நொடியின்றி மக்கள் வாழவும், செல்வம் செழிக்கவும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.

இதில் உள்ளூர் வெளியூர் என திரளான பக்தர்களுக்கு கலந்து கொண்டு சுவாமியின் அருளை பெற்றனர். பாலபிஷேக பூஜை முடிந்த பிறகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும் மண்மலை கிராம பொதுமக்கள் சார்பாக பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்