வாக்களிப்பதின் அவசியம் குறித்து திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி தலைவர் பங்கேற்பு!
மக்களவைத் தேர்தல் பணிகளை முழு வீச்சோடு செயல்படுத்திக் கொண்டிருக்கும் தேர்தல் ஆணையம் ஒவ்வொரு மாவட்டத்திலும் 100% வாக்குப்பதிவு வலியுறுத்தி பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து தான் தற்போது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நட த்தும் அதிகாரியுமான திரு பாஸ்கர பாண்டியன் அவர்களின் தலைமையில், செங்கத்தில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திய மாவட்ட ஆட்சித் தலைவர். அனைவரும் தவறாமல் வரும் 19ம் தேதி வாக்குகளை செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதன் பிறகு தாலுக்கா அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர் இதில் அங்கன்வாடி பணியாளர்கள் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி சீர்வரிசை கொண்டு வந்தனர். அதேபோல் நாட்டுப்புற கலைஞர்களும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவரோடு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தீப சித்ரா அவர்களும், செங்கம் வட்டாட்சியர் முருகன் அவர்களும் கலந்துகொண்டு பொதுமக்கள் மற்றும் சாலையோர வியாபாரிகளிடம் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். உடன் வருவாய்த்துறை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் தற்போது பதவியில் இருக்கும் சி என் அண்ணாதுரையும் அவரை எதிர்த்து அஇஅதிமுக சார்பில் திரு கலியபெருமாள் அவர்களும், பாரதிய ஜனதா கட்சி சார்பாக திரு அஸ்வத்தாமன் அவர்களும் நேருக்கு நேராக மோதுகின்றனர் என்பதும் நம் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
0 கருத்துகள்