ரஜினியின் வேட்டையன் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியிட்ட லைக்கா!

 மற்ற நடிகர்களை ஓரம் கட்ட அதிரடியாக வெளியான வேட்டையன் படத்தின் புதிய அப்டேட்! 


 மூன்று தலைமுறையாக தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்வித்து கொண்டிருக்கும் கலைஞன் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.  அன்று முதல் இன்று வரை வசூல் நாயகனாக வலம் வரும் இவரது நடிப்பில் தற்போது வேட்டையான் திரைப்படம் உருவாகி வருகிறது. 

ஜெய் பீம் படுத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினி அவர்கள் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். மேலும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், ரானா ரகுபதி, பகத் பாசில், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் என பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

தமிழகம் உட்பட பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த இப்படத்தின் சூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளது. அடுத்த கட்டமாக படத்தின் மற்ற பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள். ஏற்கனவே படத்தில் இருந்து வெளியான கிலிம்ப்ஸ் வீடியோ இணையதளங்களில் சக்கை போடு போட்டது அதேபோல் இந்த மாத இறுதியில் முதல் பாடல் வெளியாகும் என்று தெரிகிறது.

இதற்கு இடையே வேட்டையன் படத்தை பிரமாண்டமாக தயாரித்திருக்கும் லைகா நிறுவனம் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்திருக்கிறது அதன்படி வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என அது தெரிவித்திருக்கிறது இதனால் ரஜினி ரசிகர்கள் படத்தில் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயில் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது அதேபோல் வேட்டையன் திரைப்படமும் பல வசூல் சாதனைகளை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்