செங்கம் அருகே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட திருநங்கைகள்!

 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே பட்டப் பகலில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தால் பரபரப்பு



கோடை வெயில் ஒருபுறமும் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் நேரத்தில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே இருக்கும் பேயலாம் பட்டு கிராமத்தில் நான்கு பேர் கூட்டாக சேர்ந்து கொள்ளை முயற்சி ஈடுபட்டது அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

செங்கம் நகராட்சிக்கு மிக அருகில் இருக்கும் கிராமம் தான் பேயாலம்பட்டு இக்கிராமத்தில் வசித்து வருபவர் தான் கோவிந்தன் என்பவரின் மகன் மணிகண்டன். இவர் இரவு நேரங்களில் ஹோட்டல்களில் வேலை செய்வதும் பகலில் அருள் வாக்கு சொல்வதையும் வழக்கமாக கொண்டிருந்தார். 

மேலும் இவர் விவசாய நிலத்தில் தனியாக வீடு கட்டி வாழ்ந்து வந்ததாகவும், இவருக்கும் தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டன் என்கின்ற மூன்றாம் பாலினத்தவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது இருவரும் திருமணம் செய்து வாழ்ந்து வந்ததாகவும். திருநங்கை மணிகண்டன் மூலம் மேலும் இரண்டு திருநங்கைகள் அதாவது ஜவ்வாது மலையை சேர்ந்த திருப்பதியும், நாகப்பட்டினத்தை சேர்ந்த தினேஷ் என்கிற இரண்டு திருநங்கைகளுடன் பழக்கம் ஏற்பட்டு இவர்கள் நான்கு பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இதற்கு இடையே தான் கடந்த வியாழக்கிழமை அன்று அருள்வாக்கு சொல்லும் மணிகண்டன் வசித்து வரும் அதே ஊரில் இருக்கும் சந்தோஷம் (வயது 50) என்பவரது வீட்டில் மணிகண்டன் உடன் திருநங்கை கூட்டாளிகள் மூவரும் சேர்ந்து பட்டப் பகலில் இந்த வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். 

இவர்கள் கதவை உடைத்துக் கொண்டு பீரோவில் கொள்ளை அடிப்பதை பார்த்த அருகில் வசித்து வருபவர் கூச்சல் போடவே பொதுமக்களும் இளைஞர்களும் ஒன்று திரண்டு கொள்ளையர்களை கையும் களவுமாக பிடித்து தக்க பாடம் புகட்டி செங்கம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். அந்த நான்கு பேரையும் கைது செய்த சங்கம் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வேறு எந்த இடத்தில் எல்லாம் கொள்ளை அடித்தீர்கள் என்பது பற்றி அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிகிறது.

சொந்த ஊரைச் சேர்ந்த ஒருவரே கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் செங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



கருத்துரையிடுக

0 கருத்துகள்