சி என் அண்ணாதுரையை ஆதரித்து வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

 திருவண்ணாமலையில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர்!


2024 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்றத் தேர்தல் இம்மாதம் 11ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததில் இருந்து அரசியல் கட்சிகள் சூறாவளியாக சுழன்று வாக்குகளை சேகரித்து வருகின்றன.

குறிப்பாக தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு தொகுதியில் ஒதுக்கப்பட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் திமுக 21 தொகுதியில் நேரடியாக களம் காணுகிறது. 

திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே தன்னுடைய சூறாவளி பிரச்சாரத்தை தொடங்கி தமிழகம் எங்கும் வாக்கு சேகரித்து வருகிறார். அதேபோல் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களும் திமுக போட்டியிடும் ஒவ்வொரு தொகுதியிலும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதற்கு இடையே தான் இன்று திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும் தற்போதைய எம்பி யுமான சி என் அண்ணாதுரையை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நடைபயணமாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முதல்வர் மு க ஸ்டாலினுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர், அப்பொழுது பூ விற்கும் அம்மா ஒருவர் பூ கொடுத்து வரவேற்றார் அதேபோல் திடீரென இஞ்சி டீ கடைக்கு சென்று தேநீர் பருகி வாக்குகளை சேகரித்தார்.

முதல்வர் மு க ஸ்டாலின் திருவண்ணாமலைக்கு வந்ததை அறிந்த பள்ளி மாணவிகள் பலர் முதல்வருடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதேபோல் பொதுமக்களும் முதல்வர் அருகில் சென்று செல்பி எடுத்தனர். திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியானது திமுகவின் கோட்டையாக விளங்கி வருகிறது இந்த தேர்தலில் சி என் அண்ணாதுரை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக அஸ்வத்தாமன் அவர்களும் ஆஇஅதிமுக சார்பில் திரு கலியபெருமாள் அவர்களும் போட்டியிடுகிறார்கள் என்பதும் நாம் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்