தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் சௌமியா அன்புமணி! வேட்பாளரை மாற்றியதால் பரபரப்பு!

 பாமகவின் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும் தர்மபுரி தொகுதியின் வேட்பாளர் மாற்றி அறிவிப்பு வெளியிட்டது பாமக!


மக்களவைத் தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு கட்சியும் வெற்றி பெற வியூகங்களை வகுத்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கின்றன.

தமிழகத்தை பொறுத்த வரையில் திமுக ஒரு கூட்டணியும் அஇஅதிமுக ஒரு கூட்டணியும் பாரதிய ஜனதா ஒரு கூட்டணி அமைத்து மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே பாரதிய ஜனதா கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியும் இணைந்திருக்கிறது அக்கட்சிக்கு 10 தொகுதியில் ஒதுக்கப்பட்டன.

இன்று பாமக சார்பில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதில் தர்மபுரி தொகுதிக்கு அரசாங்கம் என்பவரை வேட்பாளராக நியமித்து பாமக அறிவித்தது. 
இதற்கிடையில் தர்மபுரி தொகுதி வேட்பாளரான அரசாங்கம் திடீரென மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பாமக தலைவர் அன்புமணியின் மனைவியான சௌமியா அன்புமணி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தர்மபுரி பாமகவினர் இடையே சலசலப்பு ஏற்படுத்தினாலும் சௌமியா அன்புமணி போட்டியிடுவதால் சற்று நிம்மதி அடைந்து அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து வெற்றி பெற செய்வது என முடிவு செய்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்