முதல் போட்டியிலேயே அசத்தல் வெற்றியை பதிவு செய்த சென்னை அணி!

 இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆர் சி பி அணியை வீழ்த்தியது!


இந்த ஆண்டு ஐபிஎல் சீசனின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு எட்டு மணிக்கு துவங்கியது. கடந்தாண்டு ஐபிஎல் சாம்பியன் ஆன சென்னை அணியும் பெங்களூர் அணியும் முதல் போட்டியில் பல பரிட்சை நடத்தியது. 

கடந்த ஆண்டு சென்னை அணியை வழிநடத்தி வெற்றி வாகை சூடவைத்த கேப்டன் தல தோனி அவர்கள் இந்த ஆண்டு கேப்டன் பொறுப்பை ருத்ராஜ் இடம் ஒப்படைத்து விட்டு ஒரு வீரராக மட்டுமே போட்டியில் கலந்து கொண்டார். இது ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்தாலும் தல தோனியின் தரிசனத்தை காணவே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஸ்டேடியத்தில் நிரம்பி வழிந்தனர்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆர் சி பி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணிக்கு விராட் கோலியும் கேப்டன் டூப்ளிசியும் சிறந்த துவக்கத்தை கொடுத்தனர். அதன் பிறகு வந்தவர்கள் அடுத்தடுத்து தங்களுடைய விக்கெட்டை இழந்தாலும்.

டவிக்கெட் கீப்பர் ராவத் மற்றும் தினேஷ் கார்த்தியின் அதிரடி ஆட்டத்தால் பெங்களூர் அணி 20 அவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை பெற்றது. இதில் ராவத் 48 ரன்கள்டனும் தினேஷ் கார்த்திக் 38 ரன்கள் உடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து 174 என்ற இலக்குடன் களம் கண்ட சென்னை அணிக்கு கேப்டன் ருத்ராஜ் மற்றும் புதிய வீரரான ரச்சின் ரவீந்திரா நல்ல துவக்கம் கொடுத்தனர். இதில் ருத்ராஜ் ஏமாற்றினாலும் ரவீந்திர அதிரடி ஆட்டத்தை காட்டினார். அவர் 15 பந்துகளில் 37 ரன்களை குவித்து ஆட்டம் இழந்தார். அதன் பிறகு வந்த மூத்த வீரர்களான ரகானே வும் தன் பங்கிற்கு 27 ரன்களை குறித்து ஆட்டம் நடந்தார். அடுத்து மிட்செல் 22 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து சென்னை அணிக்கு அதிர்ச்சி கொடுத்த போதிலும் அடுத்து வந்த சிவம்தூபே மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் நிலைத்து நின்று அதிரடியாக ஆடி சென்னை அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தனர்.

இறுதியில் 18 புள்ளி நான்கு ஓவர்களிலேயே 176 ஓட்டங்களை பெற்று சென்னை அணி முதல் போட்டியில் அபார வெற்றி பெற்றது. சிவம் துபே 34 ஓட்டங்களுடன் ரவீந்திரன் ஜடேஜா 25 ஓட்டங்களுடன் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 

சென்னை அணி வெற்றி பெற்ற போதும் தல தோனியின் ஆட்டத்தை காணாமல் ரசிகர்கள் சற்று வருத்தத்துடன் திரும்பினார்கள்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்