வயது முதிர்ந்த ப்ரொடியூசரை கரம் பிடிக்கும் அஞ்சலி!
இயக்குனர் ராமின் இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர்தான் அஞ்சலி. ஆந்திராவை பூர்விமாகக் கொண்ட இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
வசந்த பாலன் இயக்கத்தில் உருவான அங்காடித்தெரு படத்தில் நடித்ததின் மூலம் மிகவும் பிரபலமான நடிகையாக மாறினார். அதன் பிறகு எங்கேயும் எப்போதும், மங்காத்தா, சகலகலா வல்லவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
நடிகர் ஜெய்யுடன் இணைந்து நடித்த பொழுது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. ஆனால் ஏதோ சில காரணங்களால் இருவரும் பிரிந்துவிட்டனர். தற்போது தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நடிகை அஞ்சலி வெப் தொடரிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் ஒருவரை காதலித்து திருமணம் செய்யப் போவதாக செய்தி வெளியாகியுள்ளது. அந்த தயாரிப்பாளருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விவாகரத்து ஆகி உள்ளது. ஒரு பட நிகழ்ச்சியில் சந்தித்துக் கொண்ட இருவரும் நட்பாக பழகி பின்னர் காதலில் விழுந்ததாகவும், கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தெலுங்கு சினிமாவில் இருந்து செய்தி கிடைத்திருக்கிறது.
நடிகை அஞ்சலி என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் வாழ்பவர் இதற்கு முன் காதல், குடி, கலாட்டா என இருந்தவர் தற்போது திருமண செய்தியில் சிக்கிருப்பது சினிமா உலகில் பரபரப்பாக மாறி உள்ளது.
0 கருத்துகள்