நடிகர் அஜித்தின் உடல்நிலை குறித்து பரபரப்பாக வெளியான புதிய செய்தி!
தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் அஜித்குமார். இவர் தற்போது மகிழ் திருமேனியின் இயக்கத்தில் விடாமுயற்சி என்கிற பிரம்மாண்ட படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லைக்கா நிறுவனம் பெரிய பொருட் செலவில் வெளிநாடுகளில் எடுத்து வருகிறது.
விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரபு நாடுகளில் படு வேகமாக படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதற்கு இடையே கடந்த இரண்டு நாட்களாக அஜித் பற்றிய செய்திகள் தான் எங்கு திரும்பினாலும் பார்க்கவும் கேட்கவும் முடிகிறது.
அது என்னவென்றால் விடாமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டிருந்த அஜித்துக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதாகவும் திடீரென அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதிகாலை இரண்டு மணிக்கு அனுமதிக்கப்பட்டதாகவும் அவருக்கு மூளையில் கட்டி இருந்ததாகவும் அதனை மருத்துவர்கள் ஆபரேஷன் செய்து அப்புறப்படுத்தியதாகவும் அதன் பிறகு அஜித் மயக்கத்தில் இருப்பதாகவும் செய்திகள் வேகமாக பரவியது.
இதனை கேள்விப்பட்ட நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் மிகுந்த மன வேதனைக்கு ஆளாகினர் அவர் குணம் பெற வேண்டி பல பிரார்த்தனைகளையும் செய்து வந்தனர்.
இதற்கிடையே அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக அஜித்தை பற்றி தவறான செய்தி பரப்பப்பட்டு வருவதாக அவர் தெரிவித்திருக்கிறார். உண்மையில் திரு அஜித் குமார் அவர்கள் வழக்கமான உடல்நல பரிசோதனைக்கு தான் மருத்துவமனைக்கு சென்றதாகவும் அவரின் கழுத்து பகுதியில் நரம்பில் வீக்கமாக இருந்ததாகவும் அதற்காக சிகிச்சை பெற்று தற்போது குணம் பெற்று விட்டதாகவும் இன்று அல்லது நாளை காலை அவர் வழக்கம் போல் வீடு திரும்புவார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதன் மூலம் இரண்டு நாட்களாக பரவி வந்த அஜித்தை பற்றிய தவறான செய்தி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. கூடிய விரைவில் அவர் விடாமுயற்சி சூட்டிங்கில் கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
0 கருத்துகள்