தனக்கு வழங்கப்பட்ட தண்டனை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்ததால் மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சராகிறார் பொன்முடி.
சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்ட தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க பொன்முடி அவர்களின் தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால் தமிழக அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
ஆளும் திமுக அரசில் முக்கிய தலைவர்களில் ஒருவரான க பொன்முடி அமைச்சரவையிலும் பங்கேற்று உயர்கல்வி துறையின் அமைச்சராக பதவி வகித்து வந்தார். இதற்கிடையே கடந்த 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சி காலத்திலும் உயர் கல்வித்துறை அமைச்சராக பதவி ஏற்ற பொழுது அமைச்சர் பொன்முடியும் அவரது மனைவியும் சேர்ந்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு தொடர்ந்தனர் இத்தனை ஆண்டு காலம் நடைபெற்று வந்த அந்த வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளியானது
அதில் பதவி காலத்தில் பொன்முடி அவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது நிரூபிக்கப்பட்டதால் சென்னை நீதிமன்றம் அவரை குற்றவாளி என அறிவித்தது. அதன் காரணமாக அமைச்சர் பொன்முடி அவர்கள் தன்னுடைய அமைச்சர் பதவியும் சட்டமன்ற உறுப்பினர் பதவியும் இழந்தார். அவருடைய தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டது.
இதற்கு இடையே சொத்துக் குவிப்பு வழக்கில் தனக்கு வழங்கப்பட்ட மூன்று ஆண்டு கால சிறை தண்டனையை நிறுத்தி வைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி தரப்பில் வழக்கு தொடங்கப்பட்டது அதை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் பொன்முடிக்கு வழங்கப்பட்ட மூன்று ஆண்டுகால ஊழல் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
அதன் காரணமாக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் சட்டமன்ற உறுப்பினர் பதவி திரும்ப கிடைத்திருப்பதாகவும் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும் எனவும் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதி இருக்கிறார்.
அதன் காரணமாக நாளையோ அல்லது நாளை மறுநாளோ கா பொன்முடி அவர்கள் மீண்டும் அமைச்சராக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் ஆளுநர் இதற்கு ஒப்புதல் அளிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்., இதனால் அரசியல் தலைமை தற்போது சூடு பிடித்துள்ளது.
0 கருத்துகள்