தமிழ்மொழி குறித்து பிரதமர் மோடி பேசிய பேச்சு தற்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது.
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் தன்னுடைய சூறாவளி சுற்றுப்பயத்தை மேற்கொண்டு பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
அந்த வகையில் தற்போது மூன்றாவது முறையாக தமிழகத்திற்கு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.
அப்படி சமீபத்தில் சேலம் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி அவர்கள் தமிழ் மொழியின் பெருமையும், பழமையும் பற்றி பேசி தமிழகத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளார். தற்போது பாரதிய ஜனதா கூட்டணியில் பல்வேறுக்க அரசியல் கட்சிகள் இணைந்து இருந்தாலும் திடீரென நேற்று காலை பாட்டாளி மக்கள் கட்சியும் இணைந்துள்ளது அக் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் ஜி கே வாசன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ், டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம், ஏசி சண்முகம், ஜான் பாண்டியன் உள்ளிட்ட பல கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ஆயிரக்கணக்கான தொண்டர்களின் மத்தியில் பேசிய பிரதமர் மோடி அவர்கள் இந்த உலகில் எத்தனையோ மொழிகள் ஆயிரம் ஆண்டுகள் பழமையான மொழிகளாக இருந்தாலும் இந்த அனைத்து மொழிகளுக்கும் முன்னோடியான பழமையான மொழி தமிழ் மொழி மட்டுமே அது இந்தியாவில் அதுவும் நம்மிடம் இருப்பது நம் நாட்டிற்கு பெருமை என்று பேசினார்.
பிரதமர் மோடி அவர்கள் ஏற்கனவே பல இடங்களில் தமிழ் மொழியின் பெருமை குறித்து பேசி இருந்தாலும் தற்போது அவர் உணர்ச்சிவசப்பட்டு உலகிலேயே அதிக வயதுடைய மொழி தமிழ் மொழி தான் என்று பேசியதை தமிழ் மக்களிடையே நல்ல வருடத்திற்கு முன்னது. மூன்றாவது முறையாக பிரதமர் வேட்பாளராக கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு மீண்டும் இந்திய மக்கள் ஆதரவு தருவார்கள் என்று பாஜகவினர் எதிர்பார்த்து வருகின்றனர்.
0 கருத்துகள்