பௌர்ணமி கிரிவலத்தை பயன்படுத்தி வசூல் வேட்டை நடத்தும் சாலையோர உணவகங்கள்!

 திருவண்ணாமலையில் பக்தர்களின் காசை கறியாக்கும் திடீர் உணவகங்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



ஆன்மீக நகரமான திருவண்ணாமலையில் புகழ் பெற்று விளங்குவது தான் திரு அண்ணாமலையார் திருக்கோவில். சைவ திருத்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குவது இந்த அண்ணாமலையார் கோவில் ஆகும். வருடம் தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இக்கோவிலில் கார்த்திகை தீபம் பிரசித்தி பெற்ற பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாள் அன்று பக்தர்கள் திருவண்ணாமலையை சுற்றி கிரிவலம் செல்வது வழக்கம். அதேபோல் பௌர்ணமி நாட்களில் முக்கியமானதாக விளங்கும் சித்ரா பௌர்ணமியன்று பல லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை தரிசித்து ஆசி பெற்று செல்வார்கள். 

அப்படி ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு தமிழகத்தை தாண்டியும் ஆந்திரா கர்நாடகா கேரளா உள்ளிட்ட வெளிய மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து ஈசனின் அருளாசியை பெற்று செல்கின்றனர்.

அப்படி பௌர்ணமி கிரிவலத்துக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருந்தாலும் பக்தர்களின் பார்வை சாலையோர உணவகங்களின் மீது தான் உள்ளது. என்னதான் மலையை சுற்றி அன்னதானம் வழங்கப்பட்டாலும் பலர் சாலையோரம் இருக்கும் உணவகங்களை நாடி செல்கின்றனர். 

அதனை பயன்படுத்தி திடீரென்று உருவாகும் சாலையோர உணவகங்களும் ஏற்கனவே இருக்கும் உணவகங்களும் சேர்ந்து கட்டண கொள்கையில் ஈடுபட்டு பக்தர்களை மிரட்டி பணம் பறிக்கும் வேலையை செய்து வருகின்றனர். 

அதில் சாதாரண நாட்களில் ஒரு இட்லி ஐந்து ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பௌர்ணமி கிரிவலம் முன்னிட்டு ஒரு இட்லி 20 ரூபாய்க்கும் ஒரு பூரி 50 ரூபாய்க்கும் அதே வெளிநாட்டவர் வந்து உணவருந்தினால் ஒரு பூரி 100 ரூபாய் எனவும் சொல்லி ஏமாற்றி அவர்களிடம் இருந்து பணம் பறித்து வருகின்றனர். 

ஆன்மீக பூமியை அசிங்கப்படுத்தும் கயவர்கள்..

அதிலும் குறிப்பாக திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரிக்கு எதிராக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் உப கோயிலாக விளங்கும் ஸ்ரீ தர்மராஜா திரௌபதி அம்மன் ஆலயம் எதிரே கிரிவலப் பாதையை ஆக்கிரமித்து உணவகத்தை அமைத்து நடத்தி வரும் பெண்மணி மாதந்தோறும் நடுக்கும் பௌர்ணமி கிரிவலத்தை மையமாக வைத்து பக்தர்களிடம் உணவுக்கு முன்பு ஒரு விளையும் உணவு அருந்திய பின்பு ஒரு விளையும் சொல்லி கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது. 

அங்கு தமிழ் பக்தர்களிடம் இரண்டு பூரி 50 ரூபாய் எனவும் வெளி மாநில பக்தர்களிடம் மூன்று பூரி 100 ரூபாய் எனவும் வெளிநாட்டு பக்தர்களிடம் இரண்டு பூரி 100 ரூபாய் எனவும் விலையை ஏற்றி பகல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது. ஏன் இப்படி அதிக கட்டணம் வசூலிக்கிறீர்கள் என்று கேட்டால் வாடிக்கையாளர்களிடம் தகாதபடி பேசி அவர்களை விரட்டி அடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது. 

அதோடு அந்த உணவகத்தில் விற்கப்படும் அனைத்து உணவு பண்டங்களும் தரமற்றிருப்பதாகவும் பக்தர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அந்த உணவகம் மட்டுமல்லாமல் கிரிவல பாதையில் அமைந்திருக்கும் பல்வேறு சாலை வர உணவகங்களின் தரம் கேள்விக்குறியாக தான் இருப்பதாக வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர். 

இப்படி கிரிவல பாதையையும் சாலையும் ஆக்கிரமித்து உணவகங்களையும் கடைகளும் வைத்து திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களிடம் பகல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதை மாவட்ட நிர்வாகம் அறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்