மத்திய அரசின் புதிய திட்டத்தால் இனி மின்கட்டணம் செலுத்த தேவையில்லை!

 மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய ஒவ்வொரு வீட்டிற்கும் இலவச மின் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.


நாட்டு மக்கள் பயன்பெற வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்து வருகின்றது. 

மத்தியில் ஆளும் பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து கடந்த 10 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூபாய் 6000, ஏழை எளிய குடும்பத் தலைவிகள் பயன்பெறும் வகையில் இலவச எரிவாயு அடுப்பு போன்ற பல பயனுள்ள திட்டங்களை மேற்கொண்டு மக்கள் மனதில் நீங்க எடுத்து பிடித்து விட்டார் பிரதமர். 

அதோடு கூடிய விரைவில் நாடாளுமன்றத் தேர்தல்  நெருங்கி வருவதால் இப்பொழுது மேலும் பல புதிய திட்டங்களை மத்திய அரசானது அறிவித்து வருகிறது.

பிரதம மந்திரி சூரிய ஒளி வீடு மின்சார திட்டம்.

 அந்த வகையில் தற்பொழுது இந்தியாவில் உள்ள அனைவரும் இலவச மின்சாரத்தை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பிரதமரின் சூரிய ஒளி வீடு இலவச மின்சாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தி தற்போது செயல்படுத்தி வருகிறது. 

அதன்படி இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் நுகர்வோர்கள் மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ள இணையதளத்தில் பதிவு செய்து அதற்கான வழிமுறைகளை மேற்கொண்டு சூரிய ஒளி மின்சார தகுட்டினை பொருத்தி முறையாக பதிவு செய்தால் அரசு அதற்கு மானியம் வழங்குகிறது அந்த மானிய தொகையானது பயனார்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.


செலவில்லா மின்சார பயன்பாடு

 இதன் மூலம் மாதத்திற்கு 300 யூனிட்கள் வரை இலவச மின்சாரத்தை அனுபவிக்கவும் அரசு வழிவகை செய்துள்ளது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சூரிய ஒளி வீடு மின்சார திட்டமானது தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

 இதன் மூலம் கூடிய விரைவில் பாரத தேசமானது மின்சாரத்தில் தன்னிறைவு அடையும் என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கருத்து தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்