திருவாரூர் மாவட்டத்தில் பனைமரம் வெட்டியவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாள் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் செங்கல் சூளை தேவைக்காக பனை மரங்களை வெட்டுவது ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக் கொண்டே சென்றது. நமது தமிழக மாநில மரமான பனைமரத்தை பாதுகாக்க வேண்டி பல்வேறு அமைப்பினர் விவசாயிகள் என பலர் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பனை மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி வாங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.
இதற்கிடையே திருவாரூர் மாவட்டம் குன்னத்தூர் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரான பூமிநாதன் என்பவர் சட்டவிரோதமாக பனை மரங்களை வெட்டியதாக எடையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பனைமரம் வெட்ட ஆட்சியரின் அனுமதி வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் இருந்து வரும் நிலையில் முதன் முதலாக திருவாரூர் மாவட்டத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0 கருத்துகள்