தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் வரும் 12ஆம் தேதி வெளியாக இருக்கும் வழியில் அப்பாட்டின் முதல் விமர்சனம் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நடிகராக மாறியிருப்பவர் தான் தனுஷ். முதல் படத்திற்கும் தற்போது நடித்திருக்கும் அவரின் கேப்டன் மில்லர் படத்திற்கும் அவரின் நடிப்பு அசுர வளர்ச்சியாக வளர்ந்து இருக்கிறது. ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டி நடித்து வரும் தனுஷ் தற்பொழுது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் மாறுபட்ட கதைகளத்தில் வெறித்தனமாக நடித்திருக்கிறார்.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12ம் தேதி உலக அளவில் வெளியாக உள்ளது. ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் வழியாக்கி பற்றி கொண்டிருக்கும் நிலையில் தற்போது இப்படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியிருக்கிறது.
அதன்படி தனுஷ் இந்த படத்தில் இரண்டு காலகட்டத்தில் அதாவது சுதந்திரத்திற்கு முன் வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டிருந்த காலத்தில் அவர்களை எதிர்த்து போராடும் ஒரு ராணுவ வீரனாகவும் அதற்கு அடுத்த அவருடைய மகன் மீண்டும் தன் மக்களை காப்பாற்ற போராடும் இளைஞனாகவும் நடித்து மிரட்டி இருக்கிறார். இப்படத்தில் ஆரம்பம் முதல் முடிவு வரை தனுஷ் நடிப்பு அனல் பறக்கும் விதமாக இருப்பதாகவும் அவரின் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களை பிரமித்து பார்க்க வைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
அதேபோல் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாரின் நடிப்பும் இல்லாத அற்புதமாக இருப்பதாகவும் அவர் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க இப்படம் உந்துகோளாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. படத்தை ஒவ்வொரு காலகட்டத்திலும் காட்டி இருக்கும் விதம் அழகாக இருப்பதாகவும் பின்னணி இசை மற்றும் அனைவரின் நடிப்போம் படத்தை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் இப்படம் தனுஷின் திரை வாழ்க்கையில் மீண்டும் ஒரு வெற்றி படமாக அமையும் என்றும் வசூல் ரீதியாகவும் பிரம்மாண்ட தொகையை வசூலிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
0 கருத்துகள்