நீண்ட நாட்களுக்குப் பிறகு சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் 12ஆம் தேதி வெளியாக உள்ளது இதற்கிடையே இப்பொழுது விமர்சனம் வெளியாகி உள்ளது.
இயக்குனர் ரவிக்குமாரின் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பில் லைக்கா நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருள் செலவில் உருவாகி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12ம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் தான் அயலான். இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து யோகி பாபு கருணாகரன் ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அறிவியல் புதிரோடு உருவாகியிருக்கும் கதைக்களத்தில் சிவகார்த்திகேயன் முதல் முறையாக நடித்திருக்கிறார் இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு இடையே அயலான் படத்தின் முதல் விமர்சனம் இணையத்தில் வைரல் ஆக்கிக் கொண்டிருக்கிறது.
அதன்படி இப்படத்தின் கதை நமது பூமியில் பிரதான தொழிலாக இருக்கும் விவசாயத்தை அடியோடு அழிக்க மாற்று கிரகத்திலிருந்து ஒரு ஏலியனை வரவழைக்கிறார் வில்லன். ஆனால் பூமியை அழிக்க வந்த ஏலியன் சிவகார்த்திகேயனோடு பழகி பூமியில் இருக்கும் நல்லது கெட்டது அனைத்தையும் தெரிந்து கொண்டு பூமியை காப்பாற்ற சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து வில்லனை எதிர்த்து வெற்றி பெறுவது கதையாக அமைந்திருக்கிறது.
படத்தின் முதல் பாதி சுமாராகவும் இரண்டாவது பாதையில் வேகம் எடுத்து ரசிகர்களை படத்தின் கதையோடு கட்டி போட வைத்திருப்பதாக விமர்சனங்கள் வந்துள்ளது. அது மட்டுமல்லாமல் ஏலியன் உடன் சேர்ந்து சிவகாசிக்கிறேன், யோகி பாபு கருணாகரன் ஆகியோர் அடிக்கும் லூட்டி அசத்தலாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
மொத்தத்தில் சிவகார்த்திகேயனுக்கு அயர்லாந்து திரைப்படமும் நிச்சயம் வெற்றி படமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
0 கருத்துகள்