செங்கம் தாசில்தார் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!

 செங்கத்தில் மிகப் பழமையான வட்டாட்சியர் அலுவலக கட்டிடத்தில் இரவில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு!


செங்கம் தேர்தல் அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டாட்சியர் அலுவலகம் ஆங்கிலேயர் காலத்து ஓட்டு கட்டிடமாகும். பழமையான கட்டிடம் என்றாலும் கூட இதுவரை எந்த சேலமும் அடையாமல் கம்பீரமாக நிற்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதா வட்டாட்சியர் அலுவலகம் தற்போது தற்போது தேர்தல் அலுவலகமாக இயங்கி வருகிறது.

செங்கம் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு வருவாய் ஆவணங்கள் இந்த அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்ட வந்தது.
இந்நிலையில் திடீரென வட்டாட்சியர் அலுவலகத்தின் மேற்கூரை திடீரென தீப்பற்றி எரிந்ததை கண்ட பொதுமக்கள் செங்கம் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மேற்கூறையில் ஏற்பட்ட தீயை உடனே அணைத்து தீ வேறு எங்கும் பரவாமல் தடுத்து கட்டுக்குள் கொண்டு வந்த அனைத்து ஆவணங்களையும் பத்திரமாக பாதுகாத்தனர்.

வெள்ளையர்கள் காலத்து வட்டாட்சியர் அலுவலகம் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்